பல்லவி
மஹிலோ அம்பா3 நீது3
மஹி(மா)திஸ1ய(மெ)ன்ன தரமா
அனுபல்லவி
அஹி பூ4ஷணுனி ராணீ ஸ1ங்கரி
அம்பி3கா ப்3ரு2ஹந்-நாயகி கௌ3ரீ (மஹிலோ)
சரணம்
சரணம் 1
ஸாரஸ த3ள நயனா 1வத3ன
ஸரோஜ விஜித க4ன 2பு(ரா)ரிவை ராணி
3வரா(லொ)ஸகி3ம்பவே
பி3ரான ப்3ரோசின பரா ஸ1க்தி க3தா3 (மஹிலோ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மஹிலோ/ அம்பா3/ நீது3/
புவியில்/ அம்மா/ உனது/
மஹிம/-அதிஸ1யமு/-என்ன/ தரமா/
மகிமைகளின்/ அதிசயங்களை/ எண்ண/ இயலுமா/
அனுபல்லவி
அஹி/ பூ4ஷணுனி/ ராணீ/ ஸ1ங்கரி/
அரவு/ அணிவோனின்/ ராணீ/ சங்கரீ/
அம்பி3கா/ ப்3ரு2ஹத்/-நாயகி/ கௌ3ரீ/ (மஹிலோ)
அம்பிகையே/ பெரிய/ நாயகியே/ கௌரீ/
சரணம்
சரணம் 1
ஸாரஸ/ த3ள/ நயனா/ வத3ன/
தாமரை/ யிதழ்/ கண்ணீ/ வதன/
ஸரோஜ/ விஜித/ க4ன/ புர/-அரிவை/ ராணி/
கமலம்/ வெல்லும்/ முகிலினை/ புரம்/ எரித்தோன் நீ/ ராணி/
வராலு/-ஒஸகி3ம்பவே/
வரங்கள்/ அருள்வாயம்மா/ (வரங்கள்/ அருளி)
பி3ரான/ ப்3ரோசின/ பரா/ ஸ1க்தி/ க3தா3/ (மஹிலோ)
விரைவில்/ காத்த/ பரா/ சக்தி/ யன்றோ/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - விஜித க4ன - விஜிதா க4ன : இவ்விடத்தில், 'க4ன' என்பதுடன் அடைமொழி நிறைவுறுவதனால், 'விஜிதா' என்பது பொருந்தாது.
7 - ஸாம கா3ன நுதா ஸரஸ பதா3 - ஸாம கா3ன நுத ஸரஸ பதா3.
9 - நீவே மாயம்ம - நீவே மாயம்மா : இவ்விடத்தில், 'மாயம்மா' என்பது பொருந்தாது.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
1 - வத3ன ஸரோஜ விஜித க4ன (முகிலினை வெல்லும், கமல வதனத்தினள்) : இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. அம்மையின் வதனத்தினை, 'கமலம்' என்ற கூறிவிட்டு, கரிய முகிலுடன் ஒப்பிடுவது குழப்பமாகும்.
2 - புராரிவை ராணி (புரமெரித்தோனின் ராணியாம் நீ) : இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. 'புராரி ராணிவை' என்பது தான் சரியென நான் நம்புகின்றேன்.
3 - வராலொஸகி3ம்பவே - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. சொல்லின் இந்த வடிவம், இவ்விடத்தில், தவறென நான் கருதுகின்றேன். இது 'வராலொஸக3வே' என்றோ, 'வராலொஸகி3' என்றோ இருக்கவேண்டும். பிற்கூறிய முறையில், அடுத்து வரும், 'பி3ரான ப்3ரோசின' என்பதுடன் இதனை (வராலொஸகி3) இணைத்துப் பொருள் கொள்ளலாம்.
4 - ஸுமேரு மத்4ய லதா (புனித மேரு மலை நடுவில் திகழும் மெல்லிடையாள்) : இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில் 'லதா' என்பது தவறென நான் கருதுகின்றேன். இது 'ஸுமேரு மத்4யஸ்தா2' (புனித மேரு மலை நடுவிருப்பவள்) என்றிருக்க வேண்டும்.
5 - ரமிஞ்சு வினு - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. புத்தகங்களில், இதற்கு, 'களிப்புடன் கேளாய்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, இவ்விடத்தில், 'ரமிஞ்சு' என்ற சொல்லின் வடிவம் தவறாகும்.
Top
6 - நே குமாருட3னனுசு மா தல்லீ நீவு (நான் உனது மகவென நீ) : இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இச்சொற்களின் பொருள் நிறைவுறுவதற்கு, இந்த சரணத்தின் கடைசியில் வரும், 'ஜெப்பவம்மா' (கூறுவாயம்மா) என்பதுடன் இணைக்க வேண்டும். ஆனால், இடையில் வேறொரு சொற்றொடர் வருகின்றது. எனவே, இதுவும் தவறாகப் படுகின்றது.
8 - தாமஸமு ஜேஸே தாளனே (தாமதம் செய்தால் பொறுக்கவியலேன்) : இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில், 'ஜேஸே' என்பது தவறாகும். அது 'ஜேஸிதே' என்றிருக்கவேண்டும்.
மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த கிருதி, முழுமையாக களங்கப்பட்டுள்ளதாகவோ அல்லது இந்த கிருதி, சியாமா சாஸ்திரியினால் இயற்றப்படவில்லை என்றோ, நான் கருதுகின்றேன்.
அரவணிவோன் - சிவன்
பெரிய நாயகி - தஞ்சாவூரில் அம்மையின் பெயர்
புரமெரித்தோன் - சிவன்
Top